அநுராதபுரத்தில் வீதி விபத்து: தாயும் மகளும் உயிரிழப்பு
Anuradhapura
Accident
Death
By Fathima
லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
இந்தக் கோர விபத்து அநுராதபுரம் – விலாச்சி வீதியில் உள்ள கதிரேசன் கோயிலுக்கு அருகில் இன்று (21.08.2023) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 36 வயதான தாயும், 9 வயதான அவரது மகளும் சாவடைந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.