சம்மாந்துறை பிரதேசத்தில் நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை ஆரம்பம்
சம்மாந்துறை பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரி தலைமையில் நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை இன்று காலை முதல் வீடுகள் இராணுவ முகாம், பல்கலைக்கழக வளாகம் என்பனவற்றில் புகைவிசுறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சகீலா இஸ்ஸடீன் வழிகாட்டலில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.நௌசாத் தலைமையில் கள நடவடிக்கைகளை மேற்பார்வை செய்து இனம் காணப்பட்ட இடங்களுக்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த புகைவிசுறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கை
இராணுவப் பொறுப்பதிகாரியின் கோரிக்கைக்கு இணங்க மல்வத்தை இராணுவ முகாம் மற்றும் பீடாதிபதி எம்.எச்.ஹாரூன் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரயோக கணித விஞ்ஞான பீடத்திலும் அதன் விடுதியிலும் நுளம்புக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து மேற்பார்வை உத்தியோகத்தர்கள் பொது சுகாதார பரிசோதகர்கள் நுளம்பு கட்டுப்பாட்டு பணியாளர்கள் நிகழ்வுகளின் பின்னர் டெங்கு நுளம்பு பரவலை தடுக்கும் நடைமுறையில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து தெளிவுபடுத்தினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |