சீனாவின் மிருகக்காட்சிசாலைகளுக்கு விற்பனையாகப்போகும் குரங்குகள்
தொடர்ச்சியான அரசியல் ஸ்திரமின்மையால் நிதி நெருக்கடி காரணமாகவே, இலங்கை 100,000 மக்காக் குரங்குகளை சீனாவுக்கு விற்க முடிவு செய்துள்ளது என்று சர்வதேச செய்தி ஒன்று கூறுகிறது.
இந்த வகை குரங்குகள் இலங்கையில் சர்வசாதாரணமாக வாழ்ந்து வருகிறது.
இந்த நிலையில் சீனாவின் மிருகக்காட்சிசாலைகளுக்கு இந்த குரங்குகள் விற்பனை செய்யப்படும் எனவும் இலங்கை விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இயற்கை பாதுகாப்பு
இதனையடுத்து இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியமும், இலங்கை அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
உலகில் மக்காக் வகை குரங்குகளுக்கு உயிர்வாழ்வதற்கான அச்சுறுத்தல் உள்ளது.
எனவே அவற்றின் விற்பனை இன்னும் அரிதாகிவிடும் என்றும் இயற்கை பாதுகாப்புக்கான
சர்வதேச ஒன்றியம் கூறியுள்ளது.