இலங்கை மத்திய வங்கியில் பொலிஸார் தீவிர விசாரணை! மாயமான பெருந்தொகை பணம்
Central Bank of Sri Lanka
Sri Lanka Police
Colombo
Economy of Sri Lanka
By Chandramathi
இலங்கை மத்திய வங்கியில் இருந்து 50 இலட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக மத்திய வங்கி அதிகாரிகள் நேற்று(11.04.2023) கொழும்பு-கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதற்கமைய கொழும்பு – கோட்டை பொலிஸார் இன்று(12.04.2023) காலை மத்திய வங்கிக்கு சென்று,சிலரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
மத்திய வங்கியின் பாதுகாப்பான பண வைப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த,50 இலட்சம் ரூபா பணக் கட்டே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு தரப்பினரும், கோட்டை பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.