திருகோணமலையில் காணாமல் போயிருந்த இஸ்ரேலிய யுவதி மீட்பு

Trincomalee Sri Lanka Tourism Tourism Israel
By Mayuri Jun 30, 2024 09:45 AM GMT
Mayuri

Mayuri

திருகோணமலை பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற போது காணாமல் போயிருந்த இஸ்ரேலிய யுவதி நிலாவெளி பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து விசாரணை குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (29) மாலை அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாமர் அமிதாய் என்ற 25 வயதுடைய இஸ்ரேலிய யுவதி கடந்த 22ஆம் திகதி இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்தார்.

யுவதியை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை

எனினும் கடந்த 26ஆம் திகதி பிற்பகல் முதல் அவர் காணாமல் போயுள்ளதாகவும், இது தொடர்பில் ஹோட்டலின் உரிமையாளர் உப்புவெளி பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் காணாமல் போயிருந்த இஸ்ரேலிய யுவதி மீட்பு | Missing Israeli Girl Rescued

இதன்படி உப்புவெளி பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், உப்புவெளி பிரதேச சபை மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம் என்பன இணைந்து யுவதியை கண்டுபிடிப்பதற்காக விசாரணைகளை முன்னெடுத்தன.

நேற்று (29) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த யுவதி நிலாவெளி பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW