சவுதி அரசாங்கத்தின் அன்பளிப்பிற்கு அமைச்சர் நஸீர் அஹமட் நன்றி தெரிவிப்பு

Sri Lanka Politician Naseer Ahamed Saudi Arabia
By Chandramathi Apr 18, 2023 11:00 PM GMT
Chandramathi

Chandramathi

இலங்கையருக்கு ஒரு தொகை பேரீச்சம்பழங்களை வழங்கியமைக்காக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் சவுதி அரேபிய தூதுவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,“சவுதி அரசாங்கத்தின் நேரடி அன்பளிப்பாக இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழங்கள் கிடைத்தன.

இது தவிர சவுதி தூதரகத்தினால் வழங்கப்பட்ட மேலும் 15 தொன்கள் பேரீச்சம்பழம் பெரும் உதவியாக இருந்தது.

ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உதவி

சவுதி அரசாங்கத்தின் அன்பளிப்பிற்கு அமைச்சர் நஸீர் அஹமட் நன்றி தெரிவிப்பு | Minister Naseer Ahmed Gifting Dates Fruits

இவ்வாறு வழங்கப்பட்ட நன்கொடைகள் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.

இதன் மூலம் அவர்களின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்து, புனித ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் சம்பிரதாய தேவைகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பும் கிடைத்தது.

இது மட்டுமன்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் சவுதி அரேபியா அரசாங்கம் உதவி வருகின்றமை இரு தரப்பு உறவுகளையும் பலப்படுத்துவதாக அமைகின்றது.”என தெரிவித்துள்ளார்.