முஸ்லிம் காங்கிரஸின் சிறந்த தலைவராக எம்.எச்.எம்.அஸ்ரப் திகழ்ந்தார்:சபீஸ் புகழாரம்

Ampara Srilanka Muslim Congress Eastern Province
By Laksi Oct 09, 2024 01:25 PM GMT
Laksi

Laksi

மர்ஹூம் பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் ஒரு தலைவனாக எல்லா மக்களையும் தன் குழந்தைகளாக நினைத்து கடமை புரிந்தார். அவரின் மறைவிற்கு பின் சுயநலத்தை விதைத்து மக்களை திசை திருப்பி விட்டனர் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், அக்கரைப்பற்று அமைப்பாளருமான எஸ்.எம் சபீஸ் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட பல்வேறுபட்ட கிராமங்களில் மக்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

ஊர்வாதம்

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், நல்லதொரு தந்தை ஒரு பிள்ளை நுளம்பு கடியிலும், இன்னொரு பிள்ளை வெறும் தரையிலும் மற்றப் பிள்ளை குளிரூட்டப்பட்ட அறையிலும் படுத்து தூங்க இடமளிக்கமாட்டார். அப்படிப்பட்ட ஒரு தலைவன் எமக்குத் தேவை.

முஸ்லிம் காங்கிரஸின் சிறந்த தலைவராக எம்.எச்.எம்.அஸ்ரப் திகழ்ந்தார்:சபீஸ் புகழாரம் | Mhm Ashraff Good Leader In Slmc

ஒருத்தன் நடுவீதியில் போதையில் நிதானம் இழந்து கிடந்ததைக் கண்டு அவனுக்கு நாம் வாக்களிப்போம் என்றால் அது தான் ஊர்வாதம். நிச்சயமாக அவனால் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கி விட முடியாது.

தான் ஊரின் தலைமை பள்ளிவாசல் நிர்வாக தலைவராக இருந்த காலத்தில் போதைவஸ்துக்கு அடிமையானவர்களின் திருமணங்களை கூட இடைநிறுத்தி இருந்தமையை இங்கு நினைவூட்டுகிறேன் என்றார். 

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

கேக் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கேக் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGalleryGallery