ஹஜ் கடமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள்
Sri Lanka Police
Sri Lanka Politician
Festival
By Fathima
இலங்கையில் உள்ள இஸ்லாமியர்கள் ஹஜ் கடமை காலத்தில் மதக் கடமையான குர்பான் கொடுத்தல் விஷயத்தில் ஆடு, மாடுகளை போக்குவரத்து செய்யும் விடயத்தில் தற்போது, நடைமுறையில் உள்ள மிருகவதை சட்டத்தின் கீழ் அதனை விலக்கு அளிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி மற்றும் நக்கீப் மௌலானா ஆகியோர் பொலிஸ் மா அதிபர் விக்கிரமரத்தினவைச் சந்தித்துள்ளனர்.
அதற்கமைவாக பொலிஸ் மா அதிபர் கடிதம் ஊடாக, ஜூன் 29 திகதி வரை மாடுகளை போக்குவரத்துக்கு விலக்கு அளிக்கும் முகமாக பின்வரும்இ கடிதம் ஊடாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்தார்.