நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர்

Dubai Sri Lanka Police Investigation Ministry Of Public Security
By Dharu Aug 29, 2024 04:53 AM GMT
Dharu

Dharu

கொலை, கப்பம் கோரல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான கீத்மால் பினோய் தில்ஷான் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் துபாயில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டு இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மத்துகம ஷான் என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரின் பிரதான உதவியாளர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்

விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழு சந்தேக நபரை அழைத்து வந்த விமானத்திற்குச் சென்று அவரை தமது காவலில் எடுத்து விமான நிலையப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் | Member Of An Org Crime Gang Brought

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW