கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட யாழ். நபர்

Bandaranaike International Airport Jaffna Sri Lanka Customs
By Aadhithya Jun 30, 2024 11:31 AM GMT
Aadhithya

Aadhithya

சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளை அணிந்து வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Bandaranaike International Airport) கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் (National Dangerous Drugs Control Board) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த 47 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகள் 

இதன்போது, 995 கிராம் நிறையுடைய 24 கரட் தங்க நகைகளை குறித்த நபர் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட யாழ். நபர் | Man Caught With 995G Gold Jewelry At Bandaranaike

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்