புத்தளத்தில் பீடி இலை பொதிகளுடன் இளைஞன் கைது

Puttalam Sri Lanka Police Investigation Crime
By Laksi Sep 14, 2024 08:58 AM GMT
Laksi

Laksi

புத்தளம் பிரதேசத்தில் பீடி இலை பொதிகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினர் மற்றும் நுரைச்சோலை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் பீடி இலை பொதிகளை வேனில் கடத்திச் செல்லப்பட்ட முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மேலதிக விசாரணை

இந்தநிலையில், சந்தேக நபரிடமிருந்து 371 கிலோ கிராம் நிறையுடைய 11 பீடி இலை பொதிகள் மற்றும் வேன் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புத்தளத்தில் பீடி இலை பொதிகளுடன் இளைஞன் கைது | Man Arrested With Beedi Leaves In Puttalam

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பணி இடைநிறுத்தம்

திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பணி இடைநிறுத்தம்

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு விசா இன்றி தடுமாறும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள்

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கு விசா இன்றி தடுமாறும் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW