இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல்
Sri Lanka
India
Gold
By Fathima
இலங்கையிலிருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடல் வழியாக இலங்கையிலிருந்து தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக சுங்கத்துரை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே களிமண்குண்டு கடற்கரை பகுதியில் நேற்று (30.08.2023) ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
தங்கம் பறிமுதல்
இதன் போது இலங்கையிலிருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், மோட்டார் சைக்கிளில் தங்கம் கொண்டு வந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.