நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் கைது

By Mayuri Sep 15, 2024 10:36 AM GMT
Mayuri

Mayuri

துபாயிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 6200 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் நேற்று (14) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக கட்டுநாயக்க விமான நிலைய பிரிவின் அதிகாரிகள் குழு மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகள் முன்னெடுப்பு

சம்பவம் தொடர்பில் கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியக கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW