சலுகை வட்டி விகிதத்தில் கடன்

By Mayuri Mar 14, 2024 12:04 PM GMT

இலங்கையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சலுகை வட்டி விகிதத்தில் கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் குறிப்பிட்டுள்ளார்.

சமுர்த்தி வங்கியின் ஊடாக கடன் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

இதன் முதற்கட்டமாக முன்னோடி வேலைத்திட்டத்தின் கீழ் களுத்துறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.