சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய நூலகம் திறந்து வைப்பு

Ampara Eastern Province Kalmunai
By Aadhithya Jul 07, 2024 02:42 PM GMT
Aadhithya

Aadhithya

கல்முனை (Kalmunai) சாய்ந்தமருது பகுதியில் சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாசிகசாலை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வாசிகசாலையானது நேற்று (06) வைபவரீதியாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்கள கலாச்சார மேம்பாட்டு பணிப்பாளர்  பிரசாத் ரணசிங்கவினால்  திறந்து வைக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்ப

சாய்ந்தமருது கலாச்சார மத்திய நிலைய பொறுப்பதிகாரி யூ.கே.எம். றிம்ஸான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு பிரதம அதிதியுடன் இணைந்து இந்த வாசிகசாலையை திறந்து வைத்தனர்.

பிரதேச எழுத்தாளர்கள்

இதன்போது வாசிகசாலைக்கான அங்கத்துவம் தொடங்கி வைக்கப்பட்டதுடன், பிரதேச எழுத்தாளர்கள் தமது நூல்களை குறித்த வாசிகசாலைக்கு அன்பளிப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய நூலகம் திறந்து வைப்பு | Library Inaugurated In Sainthamaruthu Ampara

மேலும் இந்த நிகழ்வில் கலாசார மத்திய நிலைய அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் அஸ்வான் மௌலானா, உப செயலாளர் நூருல் ஹுதா உமர், பொருளாளர் ஏ.பி.எம். நௌஸாத் உட்பட நிறைவேற்று சபையினரும், பிரதேச மூத்த இலக்கியவாதிகள், கல்விமான்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்  


GalleryGalleryGalleryGallery