பிலிப்பைன்ஸில் தங்கச்சுரங்கம் அமைந்துள்ள கிராமத்தில் நிலச்சரிவு: 54 பேர் பலி

Philippines World
By K. S. Raj Feb 13, 2024 02:21 AM GMT
K. S. Raj

K. S. Raj

பிலிப்பைன்ஸ் நாட்டின் டவடி டு இரியொ மாகாணத்தில் உள்ள மசரா என்ற கிராமத்தில் தங்கச்சுரங்கம் உள்ள பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 54 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன.

குறித்த கிராமத்தை சுற்றிய மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்ற நிலையில் தங்கச்சுரங்க ஊழியர்கள் பணியை முடித்து வீடு திரும்ப பேருந்துக்காக காத்திருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மீட்பு பணி

இந்த நிலச்சரிவில் தங்கச்சுரங்க ஊழியர்கள், கிராம மக்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டுள்ளனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 32 பேரை உயிருடன் மீட்டுள்ளதோடு 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிலிப்பைன்ஸில் தங்கச்சுரங்கம் அமைந்துள்ள கிராமத்தில் நிலச்சரிவு: 54 பேர் பலி | Landslide Kills 54 Philippines Gold Mining Village

மேலும், 63 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளதோடு அவர்களில் பலர் உயிரிழந்திருக்கக்கூடும் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.