கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலைகளின் காணி உறுதிப்பத்திரங்களைப்பெற துரித நடவடிக்கை

Sri Lanka Kalmunai
By Fathima Apr 16, 2023 08:26 PM GMT
Fathima

Fathima

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் பிராந்திய ஆயுர்வேதப்பிரிவின் முயற்சியின் காரணமாக பாண்டிருப்பு மற்றும் பெரிய நீலாவனை மத்திய ஆயுர்வேத மருந்துகங்களுக்குரிய காணி உறுதிப்பத்திரங்கள் பெறப்பட்டுள்ளன.

குறித்த காணி உறுதிப்பத்திரங்களை பெறுவதற்கு கல்முனை பிரதேச செயலகம் துரிதமாக செயற்பட்டமைக்காகவும் தொடர்ந்தேர்ச்சியான முயற்சிகளை மெற்கொண்டமைக்காக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ்க்கும் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் ஆர்.ஸ்ரீதர் விசேட நன்றிகளைத் தெரிவித்தார்.

இக்காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் பணிப்பாளர் சிறீதர், பணிமனை சார்பில் பிரதி பணிப்பாளர் வைத்தியர் எம்.பீ.ஏ வாஜித், கல்முனைப்பிராந்திய ஆயுர்வேதப்பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி எம்.ஏ.நபீல் ஆகியோர் கலந்து கொண்டனர்.


GalleryGallery