குச்சவெளிப் பிரதேச சபையை கைப்பற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
குச்சவெளிப் பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த அயினியப்பிள்ளை முபாறக் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவ்வறிக்கையின்படி, 2025 ஜூன் 24ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) குச்சவெளிப் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற தவிசாளர், உப தவிசாளர் தெரிவுப்போட்டி, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மியின் தலைமையில் நடைபெற்றது.
தவிசாளர் பதவிக்காக இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். முஸ்லிம் காங்கிரசின் முபாறக் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அப்துல் மனாப் ரிஸான் ஆகியோருக்கிடையிலான போட்டியில், திறந்த வாக்கெடுப்பின் மூலம் முபாறக் 9 வாக்குகள் பெற்று தெரிவானார்.
குச்சவெளிப் பிரதேச சபை
இந்தத் தேர்தலின்போது, ஏழு உறுப்பினர்கள் இரகசிய வாக்கெடுப்பை கோரி சபை அமர்வில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும், தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் சபை அமர்வில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உப தவிசாளராக, ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த வகார்தீன் முகம்மது இம்ஜாத் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், முதல் இரண்டு ஆண்டுகளுக்குப் பிரதேச சபை தவிசாளர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் வகிக்க, அதன் பின்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் அந்தப் பதவியை வகிப்பதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்தத் தவிசாளர் தெரிவுக்காக 17 உறுப்பினர்களில் 16 பேர் சபை அமர்வில் கலந்துகொண்டனர்.
இந்த சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 5, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 4, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 4, ஐக்கிய மக்கள் சக்தி 2, சுயேட்சை குழு 1 என உறுப்பினர் அமைப்புக்களாக உள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |