சர்வதேச உதைப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை பெற்ற கிண்ணியா மாணவன்!
Trincomalee
Football
Sri Lankan Peoples
India
Eastern Province
By Rakshana MA
சர்வதேச உதைப்பந்தாட்ட போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை கிண்ணியா அல்-அமீன் பாடசாலை மாணவன் ஒருவர் பெற்றுள்ளார்.
குறித்த வாய்ப்பினை ஏ.எம்.அபாஸ் எனும் மாணவன் பெற்றுள்ளார்.
இந்த மாணவன் 17வயது பிரிவினலுக்கான இலங்கை உதைபந்தாட்ட விளையாட்டில் விளையாடுவதற்காக அகில இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உதைப்பந்தாட்ட போட்டி
எதிர்வரும் செப்டம்பர் மாதம் இந்தியா - புதுடெல்லியில் சுப்ரோட்டோ கிண்ணம் நடைபெறவுள்ளது. இந்த சுற்றுப்போட்டிக்கான இலங்கையின் 17வயது உதைபந்தாட்ட குழுவில் இடம்பிடித்துள்ளார்.
மேலும், கிண்ணியா அல்-அமீன் பாடசாலையில் இருந்து சர்வதேச போட்டியில் பங்கு பற்றும் 4ஆவது வீரர் என்பதம் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |