கிண்ணியா பிரதேச சபை மற்றும் நகர சபைக்கான தவிசாளர் தெரிவு
கிழக்கு மாகாண மேற்பார்வையில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பு அமர்வுகளில் கிண்ணியா பிரதேச சபையின் தவிசாளராக அப்துல் ரவூப் அஸ்மியும் கிண்ணியா நகர சபையின் தவிசாளராக எம்.எம்.மஹ்தியும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த தவிசாளர் தெரிவானது நேற்று (17) சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.
வாக்கெடுப்பு
குறித்த உள்ளூராட்சி சபையில் மொத்தமாக 14 உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 03 உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் 05 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் 02 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தி சார்பில் 02 உறுப் தேசிய காங்கிரஸ் சார்பில் ஒருவரும் நல்லாட்சி தேசிய முன்னணி ஒருவரும் தலா ஒருவரும் அடங்குவர்.
மேலும், கிண்ணியா நகர சபையின் தவிசாளராக எம்.எம்.மஹ்தி தெரிவு செய்யப்பட்டார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தலைமையில் குறித்த தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.

திருக்கோவிலில் ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.. பிரதேச சபையின் தவிசாளர் வெளியிட்ட தகவல்
தவிசாளர் தெரிவு
பகிரங்க வாக்கெடுப்பு மூலமாக எம்.எம்.மஹ்தி தெரிவு செய்யப்பட்டதுடன் உப தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுட்பினர் அப்துல் அஸீஸ் தெரிவு செய்யப்பட்டார்.
மொத்தமாக 15 உறுப்பினர்கள் கலந்துகொண்டதுடன் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 04 உறுப்பினர்களும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் 04 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் சார்பில் 03 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்தி சார்பில் 02 உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முண்ணனி ,பொதுஜன ஐக்கிய முண்ணனி சார்பில் தலா ஒருவரும் அடங்குவர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



