பயனாளிகளுக்கு ரமழான் உதவி வழங்குமாறு மன்னர் சல்மான் உத்தரவு
Ramadan
Saudi Arabia
By Fathima
சமூகப் பாதுகாப்பின் பயனாளிகளுக்கு ரமழான் உதவியை வழங்க இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கமைய ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு தலைவருக்கும் SR1,000 மற்றும் ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் SR500 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவித் தொகை
Ads by ProfitSence SR3 பில்லியனுக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்ட உதவித் தொகை, அடுத்த சில மணிநேரங்களில் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வைப்பு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் இன்ஜி. அஹ்மத் பின் சுலைமான் அல்-ராஜி இந்த தாராள முயற்சிக்கு மன்னர் சல்மானுக்கு தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.