இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட வேண்டும்
இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் ஒன்றுபட வேண்டும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரானிய இராணுவ மற்றும் அணுசக்தி தலங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
இஸ்லாமிய நாடுகள் கூட்டாக செயல்படத் தவறுவது மத்திய கிழக்கு முழுவதும் மேலும் தாக்குதல்களை ஊக்குவிக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
எதிர்கால நோக்கு
இதேவேளை இஸ்ரேல் தனியாக செயற்படவில்லை உளவுத்துறை, பாதுகாப்புதுறையின் ஆதரவைப்பெற்றுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேல் தற்போது ஏமன், ஈரான் மற்றும் பலஸ்தீனத்தை குறிவைப்பது போல, இஸ்லாமிய நாடுகள் இன்று ஒன்றுபடவில்லை என்றால், எதிர்காலத்தில் இஸ்ரேலின் சொந்த நலன்கள் மற்றும் நிகழ்ச்சி நிரல்களுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவோம் என்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) ஒன்றுகூடி இஸ்ரேலை எதிர்கொள்ள ஒரு உத்தியை வகுக்க வேண்டும் என்று ஆசிப் அழைப்பு விடுத்தார்.
அனைத்து இஸ்லாமிய நாடுகளும் இஸ்ரேலுடன் மேற்கொண்டுள்ள இராஜதந்திர உறவுகளைத் துண்டிக்க வேண்டும்," என்று அவர் கூறியுள்ளார்.
"நாங்கள் ஈரானுக்கு ஆதரவாக நிற்கிறோம், அவர்களின் நலன்களைப் பாதுகாக்க ஒவ்வொரு சர்வதேச மன்றத்திலும் அவர்களுக்கு ஆதரவளிப்போம்" என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |