காஷ்மீர் ஆப்பிள்களை உலகம் முழுக்க கொண்டு சேர்த்த இளைஞர்கள்
இந்திய நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீரில் இருந்து ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம், ஷார்க் டேங்க் இந்தியா என்ற ரியாலிட்டி ஷோவில் நிதி திரட்டியுள்ளது.
இந்தப் பிராந்தியத்தில் உள்ள பிற வளரும் தொழில்முனைவோரின் தன்னம்பிக்கையை இது அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் வெற்றிக்குப் பின்னால் உள்ளவர்களை அக்கிப் ஜாவீத் சந்தித்தார்.
காஷ்மீரை தளமாகக் கொண்ட ஒரு கூரியர் டெலிவரி சேவையான FastBeetle, நிகழ்ச்சியின் இந்தியப் பதிப்பில் 9 மில்லியன் ரூபாய் திரட்டியது. இந்த நிகழ்ச்சியில் தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்பு அல்லது சேவையை, முதலீட்டாளர்கள் அதாவது "ஷார்க்" குழுவிடம் வழங்குகிறார்கள்.
பின்னர் அந்தக் குழு அந்த நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்கிறது. இந்த கம்பெனியின் நிறுவனர்களான ஷேக் சமியுல்லா மற்றும் அபித் ரஷீத்தும், லிங்க்ட் இன்னில் நிகழ்ச்சி குறித்த விளம்பரத்தைப் பார்த்து, ஷார்க் டாங்கிற்கு விண்ணப்பித்திருந்தனர்.
பிரபலமான இந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், காஷ்மீரில் இருந்து நிதி திரட்டும் முதல் நிறுவனம் அவர்களுடையது.
இந்தப் பிராந்தியத்தில் இருந்து அதிக தொழில்முனைவோரை ஏன் பார்க்க முடிவதில்லை என்று ஒரு நீதிபதி கேட்டார். "எங்களிடம் அத்தகைய வசதிகள் இல்லை. எங்களை ஆதரிக்க உங்களைப் போன்றவர்கள் [ஷார்க் டாங்க் நீதிபதிகள்] இல்லை.
அதனால்தான் காஷ்மீரில் மக்கள் வேலைவாய்ப்பை நம்பியிருக்கிறார்கள்," என்று சமியுல்லா பதிலளித்தார். தாங்கள் பெறும் நிதி, காஷ்மீரில் உள்ள அதிகமான இளைஞர்கள் தங்கள் சொந்த தொழில்களைத் தொடங்க ஊக்குவிக்கும் என்று சமியுல்லாவும் ரஷீத்தும் நம்புகிறார்கள்.