மத்திய கிழக்கு பதற்றத்தின் மத்தியில் இலங்கை திரும்பியவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இஸ்ரேலில் பணியாற்றும் மற்றும் நாட்டிற்கு திரும்ப விரும்பும் பொதுமக்களுக்கு அறிவிப்பு ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, இஸ்ரேலில் மறு நுழைவு விசாவுடன் நாட்டிற்கு வந்தவர்களின் விசாக்கள் செல்லுபடி காலம், வரும் மாதம் 31 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட மனிதவளம் மற்றும் குடிவரவு ஆணைக்கழகத்தின் முடிவின்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
விசேட அறிவிப்பு
மேலும், இஸ்ரேலுக்கான சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளதையடுத்து, மறு நுழைவு விசா காலம் காலாவதியானாலும், அடுத்த மாதம் 31 ஆம் திகதி வரை இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக திரும்பலாம் என்பதையும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அனைத்து தொடர்புடைய நிறுவனங்களுக்கும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளதுமான தகவலும் வழங்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |