மத்திய ஈரானை இடைவிடாது தாக்கும் இஸ்ரேல்..!
மத்திய ஈரானில் அமைந்துள்ள ஏவுகணை சேமிப்பு மையங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது, தற்போது இஸ்ரேலிய விமானப்படை தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், ஈரானிலிருந்து இஸ்ரேலுக்கு எதிராக ஏவப்பட்ட 15க்கும் மேற்பட்ட ட்ரோன்கள், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் தாக்குதல்
இவ்விசாரணையில், போர் விமானங்களும், உலங்குவானூர்திகளும் இணைந்து, ஈரானிய வான் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை குறிவைத்து செயல்பட்டுள்ளன.
❗️ نیروی هوایی هماکنون موجی از حملات را علیه زیرساختهای ذخیرهسازی و پرتاب موشک در مرکز ایران آغاز کرده است. pic.twitter.com/vjJDlBkLpE
— ارتش دفاعی اسرائیل | IDF Farsi (@IDFFarsi) June 21, 2025
நேற்று(20), ஈரான் தீவிர பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஏவிய நிலையில், அவற்றை இஸ்ரேலின் பாதுகாப்பு துறை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியது.
இந்த ஈரான்-இஸ்ரேல் மோதல் தற்போது இரண்டாவது வாரமாக நீடிக்கின்ற நிலையில், இரு தரப்பும் மேற்கொண்ட தீவிர தாக்குதல்கள், இருதரப்புக்கும் மிகுந்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
❌ سیستمهای پدافند هوایی و کنترل به همراه هواپیماها و هلیکوپترهای جنگی نیروی هوایی، در ۲۴ ساعت گذشته بیش از ۱۵ پهپاد که از ایران به سوی حریم اسرائیل شلیک شده بودند، را رهگیری و منهدم کردند. pic.twitter.com/BuFWprdfi7
— ارتش دفاعی اسرائیل | IDF Farsi (@IDFFarsi) June 20, 2025
இச்சமயத்தில், இருநாடுகளும் செயல்படுத்திய ட்ரோன் மற்றும் ஏவுகணை முறைகளை, எதிர் தரப்பினர் பலமுறையும் தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சூழ்நிலை, மத்திய கிழக்கு பகுதிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் அளவில் போர் தீவிரமடைந்துள்ளதாக, அரசியல் மற்றும் இராணுவ ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |