இன்று முதல் இடைநிறுத்தப்படும் ஊழியர் சேமலாப நிதிய சேவைகள்

Central Bank of Sri Lanka Government Employee employee provident fund
By Rakshana MA May 21, 2025 06:24 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் (EPF) இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தொழிலாளர் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

தொழிலாளர் திணைக்களத்தின் ஊடாக சேவை வழங்கப்படும் ஊழியர் சேமலாப நிதி கணினி தரவுத்தள அமைப்பில் அவசர பராமரிப்பு நடவடிக்கை காரணமாக இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு விலையை மீறிய வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை

கட்டுப்பாட்டு விலையை மீறிய வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை

ஊழியர் சேமலாப நிதியம்

அதன்படி, ஊழியர் சேமலாப நிதியத்தின் முழு நன்மைகள், இறந்த உறுப்பினர்களின் நன்மைகள், 30% நன்மைகளை செலுத்தல், புதிய நிறுவனங்களை பதிவு செய்தல் மற்றும் பி கார்டுகளை திருத்துதல் ஆகியவை நாடு முழுவதும் உள்ள தொழிலாளர் அலுவலகங்களில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்.

இன்று முதல் இடைநிறுத்தப்படும் ஊழியர் சேமலாப நிதிய சேவைகள் | Islandwide Epf Services

மேலும், குறித்த சேவைகளைப் பெற 011 2201201 என்ற எண்ணை அழைத்து திகதியை முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தொழிலாளர் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டிய தேவையில்லை

மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டிய தேவையில்லை

தங்க விலையில் வீழ்ச்சி! வாங்கவுள்ளோருக்க வெளியான அறிவிப்பு

தங்க விலையில் வீழ்ச்சி! வாங்கவுள்ளோருக்க வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW