ISIS அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 15 இலங்கையர்களுக்கு எதிராக விசாரணை

Sri Lanka Police Sri Lanka ISIS Terrorist
By Faarika Faizal Oct 18, 2025 01:25 PM GMT
Faarika Faizal

Faarika Faizal

வெளிநாட்டு தீவிரவாத பயங்கரவாத அமைப்பான ISIS நாட்டில் பரப்புவதற்கும் அதற்கு நிதி உதவி வழங்குவதற்கும் பங்களித்ததாக சந்தேகிக்கப்படும் 15 நபர்கள் மீது விசாரணையைத் தொடங்கியுள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு கூடுதல் நீதவான் லஹிரு சில்வா முன்னிலையில் நேற்று (17.101.2025) பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் சாட்சியங்களை சமர்ப்பித்தனர்.

மேலும், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு உதவியதற்காக இந்த சந்தேக நபர்களில் சிலருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திற்கு தெரிவித்தது.

அரசியலுக்காக பகடைக்காய்களாக்கப்படும் தமிழ் - முஸ்லிம் மக்கள்

அரசியலுக்காக பகடைக்காய்களாக்கப்படும் தமிழ் - முஸ்லிம் மக்கள்

விசாரணை 

அத்துடன், அல்கொய்தா மற்றும் ISIS பயங்கரவாத அமைப்புகளின் சொற்பொழிவுகளில் கலந்து கொள்வது மற்றும் அந்த அமைப்புகளுக்கு நிதி வழங்குவது தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்படுவதாகக் கூறப்பட்டது.

ISIS அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 15 இலங்கையர்களுக்கு எதிராக விசாரணை | Isis In Sri Lanka

மேலும், இந்த விஷயங்களைப் பரிசீலித்த கூடுதல் நீதிபதி, இந்த விசாரணையின் முன்னேற்றத்தை உடனடியாக நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க உத்தரவிட்டார்.

சரத் பொன்சேகாவின் பதவி தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட தகவல்

சரத் பொன்சேகாவின் பதவி தொடர்பாக அரசாங்கம் வெளியிட்ட தகவல்

ஹமாஸ் போர் நிறுத்த உடன்பாட்டை மீறனால் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஹமாஸ் போர் நிறுத்த உடன்பாட்டை மீறனால் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW