ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிய ஈரான் வகுத்துள்ள புதிய திட்டம்!

Iran
By Fathima Apr 09, 2023 12:54 PM GMT
Fathima

Fathima

முறையாக ஹிஜாப் அணிந்து தலையை மறைக்காத பெண்களைக் கண்டறிந்து தண்டிக்கும் வகையில் பொது இடங்களில் கமராக்களை பொருத்த ஈரான் அரசு தீர்மானித்துள்ளது.

இஸ்லாமிய நாடான ஈரானில் இஸ்லாமிய ஷரியத் சட்டங்கள் கடுமையான முறையில் பின்பற்றப்படுகின்றன. அதன்படி 9 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கட்டாயம் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அங்குப் பெண்கள் இஸ்லாமிய சட்டங்களின்படி ஹிஜாப் அணிவது உள்ளிட்டவற்றைக் கண்காணிக்க நெறிமுறை பிரிவு என்று பொலிஸில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிய ஈரான் வகுத்துள்ள புதிய திட்டம்! | Iran S To Catch Women Who Don T Wear Hijab

 மாஷா அமினி 

மேலும், கடந்த செப்டெம்பர் மாதம் அந்நாட்டைச் சேர்ந்த 22 வயது யுவதி மாஷா அமினி முறையாக ஹிஜாப் அணியாததாகக் கூறி, அவரை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் உயிரிழந்ததுள்ளார்.

இதனால், பெண்கள், கல்லூரி மாணவர்கள், மனித உரிமையாளர்கள் உள்ளிட்டோர்  நாடு தழுவிய பாரிய போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். 

ஹிஜாப் அணியாத பெண்களை கண்டறிய ஈரான் வகுத்துள்ள புதிய திட்டம்! | Iran S To Catch Women Who Don T Wear Hijab

ஹிஜாப்

இந்நிலையில், ஹிஜாப் ஆடை கட்டுப்பாட்டைக் பின்பற்ற ஈரான் அரசு தற்போது தொழில்நுட்ப உதவியைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, பொதுவெளியில் ஸ்மார்ட் கமராக்களை பொருத்தி ஹிஜாப் உடைகளை அணியாத பெண்களைக் கண்டறியும் நடவடிக்கையை ஈரான் காவல்துறை மேற்கொள்ளவுள்ளது.