இஸ்ரேலை பழிதீர்க்கும் ஈரான்..! வெடித்து சிதறும் ஏவுகணைகள்
இஸ்ரேல் - ஈரான் இடையேயான தற்போதைய பதற்றமான சூழலில், தெற்கு இஸ்ரேலில் அமைந்துள்ள முக்கியமான சொருகா வைத்தியசாலை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள், ஈரான் பலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் நோக்கி ஏவியதாக உறுதிப்படுத்தியுள்ளன.
இதனால், இஸ்ரேலின் மையப்பகுதியில் எச்சரிக்கை சைரன்கள் தொடர்ந்து ஒலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பழிதீர்க்கும் நடவடிக்கை
இந்தத் தாக்குதலில், சொருகா வைத்தியசாலையின் மீது ஏவுகணை வெடித்ததால் வைத்தியசாலையின் பல பகுதிகளில் மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் காட்சிகளுடன் செய்தி வெளியிட்டுள்ளன.
மக்கள் பெரும் பதற்றத்துடன் வைத்தியசாலையை விட்டு வெளியேறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறுகையில், “வைத்தியசாலையின் பல்வேறு கட்டிடங்களில் அதிகளவு சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது சேதம் எவ்வளவு என்பதனை மதிப்பீடு செய்து வருகிறோம்.
இந்நேரத்தில் பொதுமக்கள் எம்மிடம் வர வேண்டாம் என வேண்டுகிறோம்,” என தெரிவித்துள்ளார்.
இச்சொருகா வைத்தியசாலையில், காசா போர் நடவடிக்கையில் காயமடைந்த இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் சிகிச்சை பெற்று வந்தனர் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேல், கடந்த நாட்களாக காசாவில் உள்ள மனிதாபிமான முகாம்கள் மற்றும் மருத்துவமனைகளை தாக்கி வருவதால், இப்போது சொருகா வைத்தியசாலையின் மீது நடந்த இந்த தாக்குதல், பழி தீர்க்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என சமூக வலைதளங்களில் பலர் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |