ஒரு புறம் போர்நிறுத்த முன்மொழிவு.. மறுபுறம் ஈரான் மேற்கொள்ளும் அதிரடி காய்நகர்த்தல்!

United States of America Iran Middle East
By Sajithra May 02, 2026 01:52 AM GMT

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் இடிபாடுகளுக்குள் சிக்கிய அல்லது நிலத்தடியில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களை, தற்போதைய போர்நிறுத்தத்தைப் பயன்படுத்தி ஈரான் மீட்டெடுத்து வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தங்கள் வசம் உள்ள ட்ரோன்கள் (ஏவுகணைகள்) மற்றும் ஏவுகணைத் தளவாடங்களை விரைவாக மறுசீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கினால், அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவே ஈரான் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக அமெரிக்க அதிகாரி ஒருவரும், இது குறித்து அறிந்த இரு தரப்பு வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கி, மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக இந்த ஆயுதங்களை மீட்டெடுக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

ஈரான் தனது ஆயுதக் கிடங்கின் ஒரு பகுதியை பல இடங்களில் பிரித்து வைத்தும், போலி இலக்குகளைப் (decoys) பயன்படுத்தியும் பாதுகாத்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் மற்றும் அந்நாட்டு நாடாளுமன்ற உதவியாளர்கள் கூறுகின்றனர்.

மோதல் தீவிரமடைவதற்கு முன்பே ஈரானின் பெரும்பாலான ஆயுதங்கள் நிலத்தடியில் புதைக்கப்பட்டோ அல்லது மறைக்கப்பட்டோ இருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.