இஸ்ரேலை தொடர் ஏவுகணை கொண்டும் தாக்கும் ஈரான்

Israel Iran
By Rakshana MA Jun 14, 2025 06:11 AM GMT
Rakshana MA

Rakshana MA

இஸ்ரேல் மீது ஈரான் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தாக்குதல்கள் உலக நாடுகளை அச்சம் கொள்ள வைத்துள்ளது.

இந்த நிலையில் இரண்டு இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 20 இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலின் அவசரசேவை தெரிவித்துள்ளது.

சைரன் எச்சரிக்கைக்கு பின்னர் துணைமருத்துவ குழுவினர் ரொக்கட் தாக்குதல் இடம்பெற்ற பகுதிக்கு அனுப்பப்பட்டனர், பத்துபேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன என இஸ்ரேலின் அவசரசேவை தெரிவித்துள்ளது.

நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி கடமையேற்பு

நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி கடமையேற்பு

ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேலிய தலைநகரிலிருந்து ரிசோன் லெசியோன் என்ற பகுதியில் வீடுகளை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைகள் தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலை தொடர் ஏவுகணை கொண்டும் தாக்கும் ஈரான் | Iran Israel Missile Strikes Escalate

அதேவேளை ஈரான் நாட்டின் ஐ.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேலின் பைட்டர் ஜெட் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பதுங்குகுழிகள் இலக்கு வைக்கப்பட்டதாகவும் அதனால் மேலும் இரண்டு உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டனர் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.   

காசா போர் நிறுத்தம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு

காசா போர் நிறுத்தம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு

வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ள ஆசிரியர்கள் : வெளியான தகவல்

வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ள ஆசிரியர்கள் : வெளியான தகவல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW