காசா போர் நிறுத்தம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு

United Nations India Israel Israel-Hamas War Gaza
By Rakshana MA Jun 14, 2025 04:39 AM GMT
Rakshana MA

Rakshana MA

பாலஸ்தீனத்தின் காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் கோரி, நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்களிப்பை, இந்தியா தவிர்த்துக் கொண்டது.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த, 2023 அக்டோபரிலிருந்து மோதல் நடந்து வருகிறது.

இந்த போரில், காசாவில் இதுவரை, 55,000க்கும் மேற்பட்டோர் இறந்ததாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ள ஆசிரியர்கள் : வெளியான தகவல்

வேலை நிறுத்தத்தில் குதிக்கவுள்ள ஆசிரியர்கள் : வெளியான தகவல்

வாக்களிப்பு...

இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின், பொது சபையில் ஸ்பெயின் சார்பில் போர் நிறுத்த தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது.

தீர்மானத்தின் உள்ளடங்கல்களாக, நிரந்தர போர் நிறுத்தம், மனிதாபிமான உதவிகளுக்கான தடையை இஸ்ரேல் நீக்க வேண்டும், பிணைக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும், இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

காசா போர் நிறுத்தம் தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு | India Abstains On Gaza Ceasefire Vote

இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையில், உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளில். 149 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. 12 நாடுகள் எதிராக வாக்களித்தன.

இந்தியா உட்பட, 19 நாடுகள் வாக்காளிப்பை தவிர்த்தன. இந்த நிலையில், தமது நாட்டின் நிலைப்பாட்டை வெளியிட்ட, ஐக்கிய நாடுகளின் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ், “இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினையில், இரு தரப்புக்கும் இடையே நேரடி அமைதி பேச்சு மீண்டும் ஆரம்பிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே, வாக்காளிப்பை இந்தியா தவிர்த்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கு புதிய சட்டம் இயற்றிய நாடு! வெளியான தகவல்

பெண்களுக்கு புதிய சட்டம் இயற்றிய நாடு! வெளியான தகவல்

இலங்கை இனப்படுகொலையின் பிம்பமாக மாறும் காசா..!

இலங்கை இனப்படுகொலையின் பிம்பமாக மாறும் காசா..!

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW