போரை நிறுத்த தீவிரம் காட்டும் பாகிஸ்தான்.. நெகிழ்ச்சி தெரிவித்த ஈரான் அரசாங்கம்

United States of America Pakistan Iran World
By Sajithra Apr 27, 2026 01:50 AM GMT

பாகிஸ்தானுக்கான ஈரானிய தூதர் ரெசா அமிரி மொகடம், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியின் பாகிஸ்தான் பயணத்தை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்ததற்காக பாகிஸ்தான் அரசு, இராணுவம் மற்றும் மக்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வரவும், பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை நிலைநாட்டவும் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் அயராத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அமைதிக்கான முயற்சி  

இந்நிலையில், அவர்களின் ஆக்கபூர்வமான தலையீட்டையும் (Good office initiative) தூதர் மொகடம் வெகுவாகப் பாராட்டினார்.

போரை நிறுத்த தீவிரம் காட்டும் பாகிஸ்தான்.. நெகிழ்ச்சி தெரிவித்த ஈரான் அரசாங்கம் | Iran Ambassador Pakistan Thanks Islamabad

மேலும், இந்தப் பயணத்தின் போது பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள், அரசு ஊழியர்கள் மற்றும் இஸ்லாமாபாத் வாசிகள் காட்டிய பொறுமை, விருந்தோம்பல் மற்றும் ஒத்துழைப்பிற்காகவும் அவர் தனது நன்றியைப் பகிர்ந்து கொண்டார்.

அமைச்சரின் இந்தப் பயணம் முழுமையான பாதுகாப்புடனும், அமைதியுடனும் அமைந்ததற்கு பாகிஸ்தான் அதிகாரிகளின் திறமையான மற்றும் கச்சிதமான நிர்வாகமே காரணம் என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த இணக்கமான உறவு, பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.