நிலைபேறான அபிவிருத்திக்கான இளைஞர் பங்களிப்பு

National Youth Day Sri Lankan Peoples
By Rakshana MA Aug 12, 2025 07:20 AM GMT
Rakshana MA

Rakshana MA

இவ்வாண்டு சர்வதேச இளைஞர் தினம், இன்று (12) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான கருப்பொருளாக “நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கான உள்ளூர் இளைஞர் நடவடிக்கைகள் மற்றும் அதற்கு அப்பால்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்கள் சமூக மாற்றம், புதுமை மற்றும் தலைமைத்துவத்தின் முகவர்களாக கருதப்படுகின்றனர்.

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் 54 வருட சாதனை

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் 54 வருட சாதனை

இளைஞர் பங்களிப்பு

ஆகையால், உள்ளூர் மட்டத்தில் அவர்களின் பங்களிப்பு, குறிப்பாக நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதில், மிக முக்கியமானதாக வலியுறுத்தப்படுகிறது.

நிலைபேறான அபிவிருத்திக்கான இளைஞர் பங்களிப்பு | International Youth Day 2025 Sdgs

ஐக்கிய நாடுகள் சபை தெரிவிப்பின்படி, அபிவிருத்தி இலக்குகளில் 65 சதவீதம் நேரடியாக உள்ளூர் மற்றும் பிராந்திய ஆட்சியுடன் தொடர்புடையவையாகும்.

இதனால், இளைஞர்களை உள்ளூர் மேம்பாட்டின் கூட்டாளர்களாக அங்கீகரித்து, அரசியல் மற்றும் கொள்கை அமைப்புகளில் அவர்களின் பார்வைகளைச் சேர்க்க வேண்டியது அவசியமாகிறது.

இந்த தினத்தையொட்டி, உலக நாடுகளில் பல்வேறு நிகழ்வுகள், கலந்துரையாடல்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளன.

இவை, இளைஞர்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை வெளிப்படுத்துவதோடு, எதிர்கால வளர்ச்சியின் பாதையை அமைக்கவும் உதவவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

கிழக்கு மாகாணத்திற்கு 1713 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

கிழக்கு மாகாணத்திற்கு 1713 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


Gallery