உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல்

Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination Weather
By Fathima Dec 09, 2025 09:56 AM GMT
Fathima

Fathima

பேரிடரால் பாதிக்கப்பட்ட, இந்த ஆண்டு உயர்தரப்பரீட்சை எழுதும் பாடசாலை மாணவர்கள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகளில் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

எனவே அருகிலுள்ள வலயக்கல்வி அலுவலகத்திற்கோ அல்லது 1911 என்ற குறுந்தகவல் எண்ணிற்கோ தகவல் தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை

சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஐந்து மாகாணங்களிலும் சுமார் ஒரு இலட்சம் (101,000) மாணவர்கள் உயர்தரப் பரீட்சை எழுதுகின்றனர்.

உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல் | Instructions For Advanced Level Students

இவர்களில் சிலர் திடீர் பேரழிவு காரணமாக இறந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும், மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தற்போது உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் பலர் பாதுகாப்பு மையங்களில் உள்ளதுடன், அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப மதிப்பீடு பணிகள்

மேலும், பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களின் தகவல்களும் உடனடியாகக் கண்டறியப்படும் என்றும், பின்னர் மீதமுள்ள உயர்தரப் பரீட்சை ஜனவரியில் நிச்சயமாக நடைபெறும் என்றும், எனவே, திகதி அறிவிக்கப்படும் வரை காத்திருக்காமல், ஜனவரி மாதத்தை இலக்காகக் கொண்டு பரீட்சைக்கு தயாராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சை எழுதும் மாணவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவுறுத்தல் | Instructions For Advanced Level Students

மேலும், தனியார் விண்ணப்பதாரர்கள் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த அவர்களின் தகவல் மற்றும் அடையாள எண்ணுடன் 1911 என்ற ஹாட்லைன் எண்ணிற்கு அழைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உயர்தரப் பரீட்சை நடைபெற்ற திகதிகளில் பரீட்சை எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் மிகவும் பாதுகாப்பாக உள்ளதாகவும், ஆரம்ப மதிப்பீடு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.