ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடிய இந்திய உயர்ஸ்தானிகர்

Sri Lanka High Commission of India Colombo India Harini Amarasuriya
By Laksi Oct 02, 2024 09:52 AM GMT
Laksi

Laksi

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இன்று (02) இடம்பெற்ற இந்த சந்திப்பு குறித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் சமூக ஊடக பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த பதிவில், இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்த உயர்ஸ்தானிகர், அவரது பதவிக் காலத்துக்காக நல்வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

பொதுத் தேர்தல் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் விசேட கலந்துரையாடல்

பொதுத் தேர்தல் குறித்து முஸ்லிம் காங்கிரஸ் விசேட கலந்துரையாடல்

இந்தியாவின் அர்ப்பணிப்பு 

இலங்கை மக்களுக்கான இந்தியாவின் நிலையான அர்ப்பணிப்பு குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் பன்முக இருதரப்பு உறவுகளின் முன்னேற்றத்தை துரிதப்படுத்துவது குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது. 

இதேவேளை, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா ஆகியோர் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைப்பு

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைப்பு

இலங்கைக்கு ஜப்பானால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்து விசேட கலந்துரையாடல்

இலங்கைக்கு ஜப்பானால் முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைத்திட்டங்கள் குறித்து விசேட கலந்துரையாடல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW