இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையில் கொழும்பில் இப்தார் நிகழ்வு
Colombo
Ali Sabry
Sri Lanka
Iftar
By Fathima
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் இப்தார் விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்துள்ளார்.
அத்துடன் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க, கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கே. காதர் மஸ்தான் மற்றும் ஆளும் கட்சி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராஜதந்திரிகள் உள்ளிட்ட பிரமுகர்களுடன் வர்த்தகத்துறை, ஊடகத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளையும் சார்ந்த விருந்தினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
