நெருங்கும் ஜனாதிபதி தேர்தல் : அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்

Election Commission of Sri Lanka Sri Lanka Crime Sri Lanka Presidential Election 2024
By Laksi Sep 19, 2024 10:58 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணி நேரத்தில் 208 முறைப்பாடுகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, கடந்த ஜூலை 31ஆம் திகதியில் இருந்து செப்டெம்பர் 18 ஆம் திகதி வரை 4, 945 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதில் 1,515 முறைப்பாடுகள் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்துக்கு 3,429 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக ஆயிரத்துக்கு மேற்பட்ட பேருந்துகள் தயார்

ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக ஆயிரத்துக்கு மேற்பட்ட பேருந்துகள் தயார்

முறைப்பாடுகள்

இந்தக் காலப்பகுதியில் தேர்தல் வன்முறைகள் தொடர்பில் 34 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெருங்கும் ஜனாதிபதி தேர்தல் : அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள் | Increasing Election Complaints

இதேவேளை, இதுவரையில் கிடைக்கப்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 4,304 முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வு கண்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எஞ்சிய 641 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மீது பொலிஸார் விசேட அவதானம்

சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மீது பொலிஸார் விசேட அவதானம்

வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

வாக்காளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW