தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதாக இம்ரான்கான் கட்சி அறிவிப்பு

Pakistan Election
By Fathima Apr 24, 2023 09:13 PM GMT
Fathima

Fathima

பஞ்சாப் மாகாணத்தில் தேர்தல் பிரசாரத்தை இன்று முதல் தொடங்குவதாக முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சட்டசபை தேர்தலை விரைவாக நடத்த அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அறிவித்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளார் ஆசாத் உமர் தனது டுவிட்டரில், "தெஹ்ரீக்-இ-இன்சாப் தனது தேர்தல் பிரச்சாரத்தை நாளை (இன்று) அதிகாரப்பூர்வமாக தொடங்க உள்ளது. அவர்கள் தயாராக இல்லாமல் இருக்கலாம் ஆனால் நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.