இம்ரான்கான் கொலை செய்யப்பட வேண்டும்! உள்துறை அமைச்சர்
இம்ரான் கான் தொடர்பாக தொடர் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் அமைச்சர் ராணா சனாவுல்லா இம்ரான் கான் தொடர்பில் பேசியுள்ளமை தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனடிப்படையில், தற்போதுள்ள ஷெரிப் அரசுக்கு எதிராக உள்துறை அமைச்சரான ராணா சனாவுல்ல சில கருத்துக்களையும் முன்வைத்தார்.
இதனிடையே தற்போது இம்ரான் கான் மிக மோசமான நிலைக்கு எடுத்துச் சென்றுவிட்டதாகவும் இல்லையேல் அவர் கொல்லப்படுவார் எனவும் கருத்து வெளியிட்டுள்ளார். அவ்வாறு நடக்காத பட்டத்தில் நாமே அவரை கொலை செய்துவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்ரான் கானை கடந்த 2 வாரங்களுக்குமுன் கைது செய்ய முற்பட்ட போது அவராகவே நீதிமன்றில் ஆஜரானமையினால் கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இம்ரான்கான் பாகிஸ்தானின் எதிரி. பாகிஸ்தான் நாட்டின் அரசியலை அவர் மோசமான நிலைக்கு எடுத்துச் சென்ற பெரும் பங்கு அவரையே சாரும்.
ஒன்று அவர் கொல்லப்படவேண்டும் இன்றேல் நாங்கள் அனைவரும் கொலை செய்யப்படுவோம் என அவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவரான ராணா சனாவுல்லா, இப்படிச் சொல்லியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.