வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

Sri Lanka Sri Lankan Peoples Accident
By Chandramathi Mar 23, 2024 02:56 AM GMT
Chandramathi

Chandramathi

வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகளின்றி உடனடியாக இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, விபத்து இடம்பெற்று ஒரு வருடத்திற்குள் சம்பந்தப்பட்ட காப்புறுதி நிறுவனத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம் 5 இலட்சம் ரூபாய் வரையான இழப்பீட்டுத் தொகையை பெற்றுக்கொள்ள முடியும்.

இழப்பீட்டு தொகை

அந்த தொகையை நாடளாவிய ரீதியாகவுள்ள காப்புறுதி நிறுவனங்களின் எந்தவொரு கிளையிலும் பெற்றுக்கொள்ளகூடிய வசதிகள் வழங்கப்படும்.

வீதி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்! | Immediate Compensation To Road Accidents

மாறாக பாதிக்கப்பட்டவர்கள் மேலதிகமான இழப்பீட்டு தொகையை பெற எதிர்பார்க்கும் பட்சத்தில் அவர்கள் நீதிமன்றத்தை நாட வேண்டும்.

இந்த நடவடிக்கை குறித்து காவல்துறை, பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.