யாழில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு(Photos)
Jaffna
Douglas Devananda
Sri Lanka Politician
By Kajinthan
யாழ்.கிளிநொச்சி மக்கள் பணிமனையின் எற்பாட்டில் இன நல்லிணக்கத்தையும் மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கான எடுத்துக்காட்டாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நேற்று(14.04.2023) நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வு யாழ்.ஸலாமிய்யா அரபுக்கல்லூரியில், யாழ். கிளிநொச்சி மக்கள் பணிமனை தலைவர் மெளலவி ஏச்.சுபியான் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இப்தார் நோன்பு திறப்பு
இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு இப்தார் நோன்பு திறப்பினை ஆரம்பித்து வைத்துள்ளார்.
இதில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணன் சிவபாலசுந்தரன், மற்றும்,
சர்வமததலைவர்கள், பள்ளிவாசல் மெளலவிமார்கள், இஸ்லாமியர்கள் மற்றும் சமூகநலன்
விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.