கல்முனை பொலிஸ் நிலைய இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு (Photos)
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையம் வருடாந்தம் நடத்தும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில் நடைபெற்றுள்ளது.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் நேற்றைய தினம் (11.04.2023) மாலை இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் சர்வ மதத்தலைவர்களின் ஆசிர்வாத சொற்பொழிவு மற்றும் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவுடன் ஆரம்பமாகியுள்ளது.
பிரதான பொலிஸ் பரிசோதகர்
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் ஏனைய அதிதிகளாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர். எம். டி .ஜெயந்த ரத்னாயக்க, கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் , உட்படச் சர்வமத தலைவர்கள், மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழு அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது சமூக பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.எம் வாஹீட் நன்றி உரையினை நிகழ்த்தியுள்ளார்.
சிநேக பூர்வ கலந்துரையாடல்
மேலும், பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரமழான் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், அங்கிருந்த மக்களிடம் சிநேக பூர்வமான கலந்துரையாடலை மேற்கொண்டதுடன், குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
மேலும், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர். எம். டி .ஜெயந்த ரத்னாயக்க ,கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக, கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர், உள்ளிட்ட பொறுப்பதிகாரிகளுடன் பொதுமக்களின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.























