ஸ்ரீலங்கா கதீப் முஅத்தின் நலன்புரி அமைப்பின் இப்தார் நிகழ்வு
ஸ்ரீ லங்கா கதீப் முஅத்தின் நலன்புரி அமைப்பு கொழும்பு 7 இல் உள்ள மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆப் பள்ளிவாசலில் அமைப்பின் 27வது வருட பூர்த்தியை முன்னிட்டு இப்தார் நிகழ்வு ஒன்றை கடந்த திங்கட்கிழமை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வு அமைப்பின் தலைவர் அல்-ஹாஜ் மௌலவி அப்துல் ஜப்பார் மற்றும் அமைப்பின் பொதுச் செயலாளர் மௌலவி நாகூர் றஹீம் ஆகியோரின் தலைமையில் சமூக சேவையாளர் முனீர் சாதிக்கின் அனுசரணையில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சுற்றாடல் அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் கௌரவ அதிதிகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக றிஸாத் பதியுதீன், மரைக்கார், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் இஸட்.ஏ.எம்.பைஸல், உதவிப்பணிப்பாளர்களான அன்வர் அலி, அலா அஹமட் உட்பட பல பிரமுகர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

