சாப்பிடும் முறை: சாப்பிடுவதன் சுன்னத்துகள் (நபிகளார் வழிகாட்டல்)
ஒரு மனிதன் உண்பதில் மிகவும் நேர்த்தியானது அவனது உடலுறுப்புகள் சீராக இருப்பதில் தான் உள்ளது, மோசமான அமர்தல் என்பது விலாப்புறத்தில் சாய்ந்தவாறு அமர்தல் ஆகும், ஏனென்றால் அவ்வாறு அமர்வதால் இரைப்பைக்குள் உணவு செல்வதில் மிகுந்த நெருக்கடி ஏற்படுகிறது.
”நான் சாய்ந்தபடி சாப்பிட மாட்டேன்” என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
”நான் ஒரு அடிமையை போல் அமர்வேன், ஓர் அடிமை சாப்பிடுவதை போல் சாப்பிடுவேன்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
எதிரெதிர்த் தன்மையுள்ள உணவுகள்
பாலையும் மீனையும் ஒரே நேரத்தில் உண்ணாதிருத்தலும் நபிகள்(ஸல்) பின்பற்றிய ஒன்றே. பாலையும் புளிப்பான உணவுப்பொருளையும் சாப்பிட மாட்டார்கள்.
ஒரே இயல்பு கொண்ட வேறுபட்ட இரண்டு பொருள்களையோ, எதிரெதிர் தன்மை கொண்ட இரண்டு பொருள்களையோ ஒன்றாக சாப்பிட மாட்டார்கள்.
கடுமையான வெயில் சுட்டெரித்துக்கொண்டிருக்கின்ற நேரத்தில் உண்ணமாட்டார்கள், முதல்நாள் உணவை மறுநாள் சூடேற்றப்பட்டு வழங்கப்படுகின்ற உணவையும் உண்ணமாட்டார்கள்.
இரவு உணவை சாப்பிட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தி வந்தார்கள், ”இரவு உணவை சாப்பிடாமல் விட்டுவிடுவது முதுமைக்கு காரணமாகும்” என்று கூறினார்கள்.
சாப்பிட்ட பின் தூங்குவதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள், ஏனென்றால் அவ்வாறு செய்வது மிகப்பெரும் தொல்லையை ஏற்படுத்தும்.
இதேபோன்று உணவுண்ணும் போதே நீரைப்பருகுவது வயிற்றை கெடுக்கும், குறிப்பாக அந்த நீர் வெந்நீராகவோ குளிர்ந்த நீராகவோ இருந்தால் பாதிப்பு இருக்கும், இது கெட்ட பழக்கமாகும்.
சாப்பிடுவதன் சுன்னத்துகள்
1. விரிப்பை விரிப்பது
2. இரண்டு கைகளையும் மணிக்கட்டு வரை கழுவுவது
3. ஒரு காலை மடக்கி வைத்து மற்றொரு காலை குத்த வைத்து உட்காருவது அல்லது அத்தஹிய்யாத் முறையில் உட்காருவது
4. சாய்ந்து கொண்டு சாப்பிடக்கூடாது
5. சாப்பிடுவதற்கு முன்பு துஆ ஓதுவது
6. வலதுகையால் சாப்பிடுவது
7. மூன்று விரல்களால் சாப்பிடுவது
8. தன் பக்கமிருந்து சாப்பிடுவது
9. மிக சூடாக சாப்பிடக்கூடாது
10. உணவை குறைகூறக்கூடாது
11. உணவு கீழே விழுந்துவிட்டால், அதை எடுத்துச் சாப்பிடுவது.
12. தட்டை வழித்தும், கைவிரல்களை சூப்பியும் சாப்பிடுவது
13. சாப்பிட்ட பின்னர் துஆ ஓதுவது
14. சாப்பிட்ட பின்னர் கை கழுவி, வாய் கொப்பளித்துக் கொள்வது
சாப்பிடும் முன்
”பிஸ்மில்லாஹ்” அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு உண்கிறேன்
சாப்பிடும் முன் பிஸ்மில்லாஹ் சொல்ல மறந்தால்
”பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி”
இதன் ஆரம்பத்திலும் இறுதியிலும் அல்லாஹ்வின் திருப்பெயர் கொண்டு (நான் உண்கிறேன்)
சாப்பிட்டு முடித்த பின்
”அல்ஹம்து லில்லாஹி கஸீரன் தய்யிப(ன் முபா(ர(க்)கன் பீஹி ஃகைர மக்பிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தக்னன் அன்ஹு ரப்ப(னா”
அல்ஹம்து லில்லாஹ் என்று கூறலாம். ஆதாரம்: முஸ்லிம் 4915
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |