சுரங்கத் தொழிலாளர்கள் எப்படி நோன்பு பிடிக்கிறார்கள் தெரியுமா...!
உலகெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்கள் தற்போது நோன்பு பிடிப்பதை தவறாது செய்து வருகின்றனர்.
இதற்கமைய நோன்பு துறக்கும் போது வெவ்வேறு தொழில்களில் ஈடுபடும் பல தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்கு மத்தியில் நோன்பு துறக்கின்றனர்.
இந்நிலையில் போஸ்னிய சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் நோன்பை ஆழமான சுரங்கத்தில் துறப்பதாக தெரிவித்துள்ளனர்.
காரணத்தைக் கண்டுபிடிப்பது எப்போதும் எளிது
இது தொடர்பில் சுரங்கத் தொழிலாளி சாலிஹ் டோக்லோட் கூறுகையில்,“நோன்பைக் கடைப்பிடிக்க விரும்பாத ஒருவருக்கு, ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பது எப்போதும் எளிதானது.
நாங்கள் கடினமாக உழைக்கிறோம், இங்கு சூடாக இருக்கிறது, ஆனால் நாங்கள் நோன்பைக் கடைப்பிடிக்க விரும்புகிறோம்.
இந்த கஷ்டத்தை தாங்கும் சக்தியை அல்லாஹ் எங்களுக்குத் தருகிறான் ”என்று சுரங்கத் தொழிலாளி கூறியுள்ளார்.