அரசாங்கத்தால் கல்முனையில் வீட்டுத்திட்டங்கள் கையளிப்பு
Ampara
Sri Lankan Peoples
Eastern Province
Kalmunai
By Rakshana MA
கல்முனையில், இலங்கை அரசாங்கத்தால் வீட்டுத்திட்டங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, நேற்று(25)கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி ரண் விமன வீடமைப்பு திட்டத்தின் கீழ் இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கையளிப்பு நிகழ்வு
பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சமுர்த்தி தலமைப்பீட முகாமையாளர் வீ.சிறிநாதன், முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.நஜீப் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும், பெரியநீலாவணை 2 மற்றும் பாண்டிருப்பு 1ஏ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள இரண்டு பயனாளிகளுக்கு இந்த வீடுகள் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







