திருகோணமலையில் தொடரும் சீரற்ற காலநிலை
Sri Lankan Peoples
Climate Change
Weather
By H. A. Roshan
திருகோணமலை(Trincomalee) - தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவின் நடுப்பிரப்பந் திடல் பகுதியில் வீடொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் சேதம் ஏற்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று (07) கடும் காற்றுடன் கூடிய பெய்த கன மழை காரணமாக குறித்த மரம் வீட்டின் மீது விழுந்ததில் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடும் காற்றுடன் கூடிய மழை
இதனால் வீட்டு உபகரணங்கள் உட்பட பல பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் வீட்டு கூரையுடனான கட்டிடமானது பகுதியளவில் உடைந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

