தென் மாகாணத்தை ஆட்கொள்ளவுள்ள பலத்த மழை : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Sri Lanka Climate Change Weather
By Rakshana MA Jul 19, 2025 03:16 AM GMT
Rakshana MA

Rakshana MA

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (19) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதியில் இலங்கை பணிப்பெண்ணுக்கு நேர்ந்துள்ள அவலம்

சவுதியில் இலங்கை பணிப்பெண்ணுக்கு நேர்ந்துள்ள அவலம்

பலத்த மழை எச்சரிக்கை

அத்தோடு, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாணத்தை ஆட்கொள்ளவுள்ள பலத்த மழை : விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Heavy Rain Wind Warning Central Sri Lanka

ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

குருக்கள்மட புதைகுழிகளைப் பற்றி உண்மை...

குருக்கள்மட புதைகுழிகளைப் பற்றி உண்மை...

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW