கொட்டித் தீர்க்கப்போகும் மழை : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Sri Lanka Climate Change Weather
By Rakshana MA Jun 05, 2025 03:35 AM GMT
Rakshana MA

Rakshana MA

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (05.06.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

அதற்கமைய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிண்ணியாவில் சர்வதேச சுற்றாடல் தின நிகழ்வுகள்

கிண்ணியாவில் சர்வதேச சுற்றாடல் தின நிகழ்வுகள்

 விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.

கொட்டித் தீர்க்கப்போகும் மழை : விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Heavy Rain Warning Srilanka

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.  

குச்சவெளி சம்பவம் தொடர்பில் கண்டனம் வெளியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர்

குச்சவெளி சம்பவம் தொடர்பில் கண்டனம் வெளியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர்

அகில இலங்கை தமிழ் மொழித் தின போட்டியில் முதலிடங்களை பெற்ற கல்முனை வலயம்

அகில இலங்கை தமிழ் மொழித் தின போட்டியில் முதலிடங்களை பெற்ற கல்முனை வலயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW